follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பொசன் தினத்தில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு சம்பவமாம்

பொசன் தினத்தில் ஈஸ்டர் தாக்குதல் போன்ற ஒரு சம்பவமாம்

Published on

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வளவா ஹெங்குனவெவே தம்மரதன தேரரினால் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் மைத்திரி குணரத்னவுடனான கலந்துரையாடலின் போது, ​​தம்மரதன தேரர் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்தொன்றினை தெரிவித்திருந்தார்.

வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் பொசன் பண்டிகையை குறிவைத்து ஈஸ்டர் தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால், அதற்கு காரணமானவர்களை தூக்கிலிடக்கூடாது, சுறா மீன்களுக்கு தூக்கி எறிய வேண்டும் என்று அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வளவா ஹெங்குனவெவே தம்மரதன தேரர் கருத்து தெரிவிக்கையில்;

“இந்த வருடம் சுமார் இருபது இலட்சம் மக்கள் அனுராதபுரத்திற்கு மிஹிந்தலையிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை மிஹிந்தலையை பாதுகாக்க எந்த ஒரு பாதுகாப்பு படை அதிகாரியும் அழைக்கப்படவில்லை. அரசு என்னை தீவிரவாதியாக பார்ப்பதால், உயிரிழப்பை கூட ஏற்படுத்தலாம். கடந்த காலத்தில் என்னைக் கொல்லத் திட்டமிடப்பட்டது, இப்போதும் திட்டமிடப்பட்டுள்ளது.

என்றாகும் நாட்டு மக்கள் மீது ஒரு கீறல் கூட விழ இடமளிக்க மாட்டேன். நாட்டு மக்களின் முதல் பண்டிகை இது. இந்த நாட்டில் துறவி மிஹிந்துவின் மதத்தைப் படித்தவர்கள் யாரும் பாராளுமன்றத்தில் இல்லை. அப்படி இருந்தால் பொசன் தொடர்பில் இவ்வாறு அலட்சியமாக இருந்திருக்க மாட்டார்கள்.. இது மக்களின் தகுதி. இவற்றை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.

குறைந்த பட்சம் எலார மன்னன் காலத்தில் இது நடக்கவில்லை. அரசர் காலத்திலும் இந்த அருட்கொடைகள் செய்யப்பட்டுள்ளன. அனகாரிக தர்மபால கூறியது போல் வெள்ளையர்கள் இலங்கையை இப்போது ஆள்கிறார்கள். அவர்களுக்கு மதம் கிடையாது. அனைவரும் பாராளுமன்றத்தில் உள்ளனர். அதிகாரத்தைப் பெறுவது பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

அர்ப்பணிப்புள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் ஆறு மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து நாட்டில் ஒழுக்கமான ஆட்சி அமைய வேண்டும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...