follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2அநுர - ரணில் என்னதான் பேசியிருப்பாங்க..?

அநுர – ரணில் என்னதான் பேசியிருப்பாங்க..?

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்திருந்தார்.

தனியார் தொலைகாட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அநுர குமார திசாநயக்கவும் சந்தித்துள்ளார் என எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது உண்மையா பிழையா என்று நாம் விசாரித்து வருகிறோம்.

சேனல் ஒன்றுக்கு வந்து அநுர குமார திசாநாயக்க மூன்று மணித்தியாலங்கள், மிகவும் பெறுமதியான நேரத்தினை அரச நிறுவனம் ஒன்று வழங்கியமை கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. மக்கள் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

அநுர குமார ஒரு கதிரையிலும் இன்னுமொரு வெற்றுக் கதிரை வைத்துக் கொண்டு சும்மா சீன் காட்டினார்கள்.. அவ்வாறு செய்ய அரச அலைவரிசை ஒன்று நேரத்தினை ஒதுக்கியமை குறித்து சந்தேகம் நிலவுகிறது.

என்னதான் சொன்னாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் சந்தேகமில்லை. வேறு யாரும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க மாட்டார்கள்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் இந்தியா பங்கேற்காது

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்யும் அனைத்துப் போட்டிகளிலிருந்தும் விலக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்குக்...

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...