follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

Published on

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும், அரச பதவிக்காகவும், ஜனாதிபதி பதவிக்காகவும் அல்ல, நாட்டில் எங்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்புமனு தனிப்பட்ட விவகாரம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் கூறியுள்ள அவர், இதே குழுவே இந்த நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...