follow the truth

follow the truth

June, 17, 2025
HomeUncategorizedகுற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கேள்வி கேட்கக் கூடாது

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கேள்வி கேட்கக் கூடாது

Published on

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தெளிவான நிலைபேறான தீர்வொன்று அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது பாதாள உலகத்தினரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தாக்கம் மற்றும் பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தேக நபர்களைக் கொண்டு வந்து கேள்வி கேட்பதும் பொலிஸாரினால் கேட்பதும் ஊடகங்களில் காட்டப்படுகின்றன.
வரலாற்றில் கடுமையான குற்றங்கள் நடந்தபோதும் ஊடகங்களின் முன்னிலையில் கேள்வி கேட்பதில்லை. எமது நாட்டின் குற்றவியல் சட்டம் நகைச்சுவையாக உள்ளது.

சட்டத்திற்கு காணப்படும் பயத்தை இல்லாது செய்ய வேண்டாம். இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் குற்றங்களின் அதிகரிப்பிற்கு ஏதுவாகலாம் என்றும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு

உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அந்த நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்குமாறு அறிவிக்கப்படும்...

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்

பாகிஸ்தான் மீது இந்தியாவினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப்...

JVP – NPP இரண்டிலும் மாற்றங்கள் எதுவுமில்லை – இரண்டும் ஒன்றுதான்

தங்களுக்கு எதிரான போராட்டங்களைக் கையாளுவதற்கு அநுர அரசாங்கத்துக்குப் பயங்கரவாத தடைச் சட்டம் தேவையாக உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர...