follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்அம்பானி வீட்டு திருமணத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அம்பானி வீட்டு திருமணத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரமாண்டமாக கடந்த வாரம் நடந்தது. இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் எக்ஸ் தள பதிவு ஒன்றில், அம்பானியின் இல்ல திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால் நாளை பாதி உலகமே தலைகீழாக மாறிவிடும் என்று மனம் நினைத்துக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து மும்பை பொலிஸார் அம்பானியில் இல்ல திருமணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத்தில் வசிக்கும் விரால் ஷா என்ற இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...