வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்வது தொடர்பிலான சுற்றறிக்கை வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.