follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டாலும் உள்ளே இருப்பது போன்றதே வெளியில் இருப்பதும்

ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டாலும் உள்ளே இருப்பது போன்றதே வெளியில் இருப்பதும்

Published on

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கபிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4 வருட கடூழிய சிறைத்தண்டனை என்ற தீர்ப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என சட்டத்தரணிகள் கருதுகின்றனர்.

காரணம் அவர் ஏற்கனவே தாக்கல் செய்த பிணைமனு மீதான விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஒரு வேலை ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டால் அவர் பிணையில் விடுதலை செய்யப்படலாம்.

ஒரு வேலை அந்த மேன்முறையீட்டு மனு விசாரணையில் ஞானசார தேரருக்கு பிணை மறுக்கப்பட்டால் 2024-03-28 ஆம் திகதியில் இருந்து 2024-07-18 அவர் அனுபவித்த சிறைத்தண்டனை காலம் கழிக்கப்பட்டு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்த சீராய்வு மனு (ரிவிஷன் பெட்டிஷன்) மீதான விசாரணையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...