follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

Published on

மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்த கருத்து காரணமாக வானொலி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தல் ஊடாக கணக்குகள் தீர்த்துக் கொள்ளப்படும் என்றும், நாட்டை விட்டு வெளியேற இடமளிக்க மாட்டோம் என்றும், ஒளிந்து கொள்ள இடமில்லை என ஹட்சனுக்கு தெரிவிப்பதாக கூறிய வசந்த சமரசிங்கவின் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்து நாட்டை விட்டு வெளியேறினால் அந்த நாடுகளில் திசைகாட்டியின் பிரதிநிதிகள் அதிகமாக இருப்பதால் பார்த்துக் கொள்வார்கள் என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுப்பதாகவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யும் போது அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வன்முறையற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக நாம் செயற்படுமாறு பரிந்துரைக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...