follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"பொலிஸ் மா அதிபர் தனது சீருடையை கழற்றிவிட்டு சிவில் உடையில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுகிறார்"

“பொலிஸ் மா அதிபர் தனது சீருடையை கழற்றிவிட்டு சிவில் உடையில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுகிறார்”

Published on

பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தியோகபூர்வ சீருடையை கழற்றி விட்டு சிவில் உடையில் வந்து செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அதனை மறுத்த அரசாங்கம், அவர்கள் சீருடையுடன் அல்லது அணியாமல் பாதுகாப்பு அமைச்சுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“அப்படியானால் அவர் துணி இல்லாமல் வந்தாரா என்று தெரியவில்லை. பிரதமர் வெட்கப்படுகிறார். நானும் ரோயல் மாணவன் தான். அவரும் ரோயல் மாணவன் தான். ரோயல் மாணவர்கள் கேலரியில் காத்திருக்கிறார்கள். உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லாது. அரசியலமைப்பை மீறுவதற்கு எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. இன்று, இரண்டு அரச குடும்பத்தார் ஒன்று சேர்ந்து உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறியுள்ளனர்..”

பொலிஸ் மா அதிபரின் கடமைகளை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...