follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2மரமும் மயிலும் ஆதரவு யாருக்கு?

மரமும் மயிலும் ஆதரவு யாருக்கு?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குக் காரணம், அந்தக் கட்சி ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுகிறது.

எனினும், தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் “அத தெரண”விற்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது ஆதரவு தொடர்பிலும் மௌனமாகவே இருந்து வருகிறது.

கடந்த 27ம் திகதி இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தள மாவட்ட எழுச்சி மாநாட்டில் கூட புத்தள அரசியல் குறித்தே கட்சியின் தலைமை பேசியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...