follow the truth

follow the truth

August, 20, 2025
HomeTOP2தயாசிறியின் ஆதரவு சஜித்திற்கு

தயாசிறியின் ஆதரவு சஜித்திற்கு

Published on

இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம இன்று (30) காலை கரந்தெனியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மனிதநேய மக்கள் கூட்டணியின் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பூரண அங்கீகாரமும் ஆதரவும் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமது கட்சி பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்ததையடுத்து மனிதநேய மக்கள் கூட்டணி இந்த புதிய தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய தற்போதைய ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்பதாலும் இந்நாட்டு மக்கள் சஜித் பிரேமதாசவைச் சுற்றி மிக நெருக்கமாக இருப்பதாலும் தமது கட்சிக்கு இந்த தீர்மானத்தை எடுப்பது இலகுவானது எனவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதியாக வருவார் என்று மக்கள் தீர்மானித்துள்ளதை தமது கட்சியும் தலைவணங்குவதாகவும் கட்சியின் தலைவர் தயாசிறி ஜயசேகரவுடன் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட இருபத்தி இரண்டு கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தயாசிறி ஜயசேகர இந்த அனைத்துக் கட்சிகளுக்கும் தலைவர் என்றும் அவரது பூரண ஆசியுடன் சஜித் பிரேமதாசவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும் சமன் பிரியந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணியின் ஆதரவு கிடைக்காது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மட்டுமே முழுமையான ஆதரவைப் பெறும் என்றும், அந்த ஆதரவை வழங்குவதற்கான ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகும் என்றும் சமன் பிரியந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...