follow the truth

follow the truth

May, 2, 2025
Homeலைஃப்ஸ்டைல்தூக்கமின்மையை கண்டறியும் நவீன முககவசம்

தூக்கமின்மையை கண்டறியும் நவீன முககவசம்

Published on

நிம்மதியான தூக்கம் உடல் ஆரோக்கியம் மகிழ்ச்சியை கொடுக்கும். என்ன நடந்தாலும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படக்கூடியது.

தூக்கக் கோளாறுகள் இயல்பான உடல், மன அழுத்தம் உணர்ச்சி செயல்பாடுகளில் தலையிடும் அளவுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பாலிசோம்னோ கிராபி மற்றும் ஆக்டிகிராபி ஆகிய சோதனை மூலம் தூக்கக் கோளாறுகளை கண்டறிகின்றனர்.

இந்த சோதனைகள் கடினமானது. இவற்றின் மூலம் ஒருவருக்கு எந்த விதமான தூக்க குறைபாடு உள்ளது என்பதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது கடினம்.

தூக்கமின்மை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐதராபாத் ஐஐஐடி-எச் ஆராய்ச்சியாளர்கள் நவீன முக கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முக கவசத்தை ஒருவருக்கு அணிய செய்தால் அவருக்கு எந்த விதமான தூக்கமின்மை உள்ளது என்பதை 80 சதவீதத்திற்கு மேல் துல்லியமாக கண்டறிய முடியும்.

இது கண் மற்றும் கால் இயக்கம் ஆக்சிஜன் அளவு இதயத்துடிப்பு சுவாச முறை மற்றும் மூளை போன்ற பல்வேறு உடல் உறுப்புகளை கண்காணிக்க கூடியது.

இந்த முகமூடி மூலம் வெவ்வேறு விதமான தூக்க குறைபாடுகளை கண்டறிந்து அதன் மூலம் சிகிச்சை அளித்து தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும்.

நமக்கு ஏன் தூக்கம் வர மாட்டேங்குது என நினைப்பவர்கள் நிம்மதியாக தூங்க இந்த முககவச சோதனையை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...