follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

Published on

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே. டி. லால் காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எவ்வாறாயினும், தாம் வழங்கிய கருத்துக்களில் சிக்கல் இருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு கடுகன்னாவ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்தவை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திலித் ஜயவீரவுக்கு ஆதரவான குழுவில் உள்ள பொஹட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆளும் கட்சியை விட்டு வெளியேறி அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் போது நாட்டின் பாராளுமன்றத்தை கைப்பற்ற மக்கள் விடுதலை முன்னணி திட்டமிட்டதாக கே.டி. லால்காந்தவின் பகிரங்க அறிக்கையே அவர் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்தால், தன்னை கைது செய்து காட்டுமாறு நானும் சவால் விடுக்கிறேன் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்த சட்டத்தரணிகள், குற்றவியல் சட்டத்தின் ஆறாவது பிரிவின் பிரகாரம் மரண தண்டனைக்குரிய குற்றத்தை லால்காந்த செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...