follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுபாலஸ்தீன மக்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை தருவோம்

பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை தருவோம்

Published on

இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் டாக்டர். ஸுஹைர். எம். எச். சஹிட் உடன் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாலஸ்தீன மக்களுக்கு தனது தொடர்ச்சியான ஆதரவை தருவதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அத்தோடு பாலஸ்தீன மக்கள் மீதான அமைச்சரின் தனிப்பட்ட அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் வகையில், டாக்டர். சஹிட் , அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு பாலஸ்தீன கெஃபியை பரிசாக வழங்கினார்.

மேலும், பாலஸ்தீன மக்கள் பாரிய இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளான இக்காலத்தில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட சாதாரண இலங்கையர்கள் எவ்வாறு பாலஸ்தீன மக்களின் நலனுக்காகப் பங்களிக்க முன்வந்துள்ளனர் என்பதைத் தூதுவர் இதயப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பாலஸ்தீன பிரச்சினைக்கு இலங்கை மக்கள் அளித்த ஆதரவிற்கும், ஒற்றுமைக்கும் தூதுவர் பாராட்டு தெரிவித்தார். அவர் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், ஐக்கிய மக்களாக ஒன்றிணைந்து செயற்படுமாறு இலங்கையர்களை வலியுறுத்தினார்.

பாலஸ்தீன மக்களுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தூதுவர் ஆற்றிய அளப்பரிய சேவைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நன்றி தெரிவித்ததோடு, உலகளாவிய ஆதரவு இறுதியில் பிராந்தியத்தில் அமைதியை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், பாலஸ்தீன மக்களுக்கு தனது தனிப்பட்ட ஆதரவையும், அதே போல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) ஆதரவையும் தெரிவித்ததுடன், தூதுவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இலங்கைக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...