follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

Published on

தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தொழிலாளிக்கு மாதாந்தம் 47,050 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடமைக்காக பல தொழிலாளர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அந்த சேவைக்கு ஒரு காவல் நிலையத்தில் மூன்று பணியாளர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தரத்தைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.

நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

சில கட்சி அமைப்பாளர்கள் பல இலட்சம் ரூபா செலவழித்து கட்அவுட்களை காட்சிப்படுத்தியுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...