follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்2025ல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அவுஸ்திரேலியா

2025ல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அவுஸ்திரேலியா

Published on

குடியேற்ற அளவை குறைக்கும் முயற்சியாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் புதிய திட்டத்தை அவுஸ்திரேலியா அறிமுகம் செய்யவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய மாணவர் சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் அவுஸ்திரேலியா 2025 இல் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 270,000 ஆக மட்டுப்படுத்தவுள்ளது.

இதன்படி ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் தனிப்பட்ட கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசு நேற்று (27) அறிவித்தது.

2024 ஆரம்பத்தில் அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி அவுஸ்திரேலியாவில் சுமார் 717,500 வெளிநாட்டு மாணவர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கொவிட்–19 தொற்றுக்கு முந்தைய நிலையை விடவும் 10 வீதமும், தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்களில் 50 வீதம் வரையும் அதிகரித்திருப்பதாக அவுஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜேசன் கிளாரே தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...