follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கிளப் வசந்த கொலையில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

கிளப் வசந்த கொலையில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது

Published on

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையை செய்ய வந்த நபர்களுக்கு தங்குமிட வசதி மற்றும் ஆதரவை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் மேல்மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த என்பவரை சுட்டுக் கொன்றதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த காரின் சாரதி ஆகியோர் நேற்று (28) இரவு பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 32 வயதான சஜித் ஸ்ரீஆந்த டி சில்வா அல்லது ‘பொடி பாலயா’ என பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி மதுஷங்க டி சில்வா அல்லது ‘பஹிரவயா’.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் தங்கியிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் தற்போது அத்துரிகிரிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றைய நபரும் கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...