follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்காற்று மாசுபாடு - இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்

காற்று மாசுபாடு – இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்

Published on

இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்துள்ளது. முக்கியமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுவிடவே சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறாக மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசித்து வருவதால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் குறைவதற்கான ஆபத்துகள் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் ஒட்டுமொத்தமாக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன பயன்பாடு அதிகரிப்பு காரணமாக காற்று மாசுபாடு தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவின் வடக்கு பகுதி நாட்டின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாக உள்ளதாகவும், 2022ம் ஆண்டில் காற்று மாசு தரநிலை 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆனாலும் இது தொடர்ந்தால் மக்கள் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...