follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2இலங்கை தமிழரசு கட்சி இரண்டாகப் பிளவு

இலங்கை தமிழரசு கட்சி இரண்டாகப் பிளவு

Published on

வவுனியாவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குழு ஒன்று கூடி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் என தீர்மானம் எடுத்திருந்தது தமது கட்சியின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல என அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜா விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தீர்மானத்தை எடுக்க கட்சியின் கூட்டம் கூடும் என்பது கூட தனக்கு தெரியாது என சேனாராதிராஜா தெரிவித்துள்ளார்.

எனவே இந்த முடிவை இலங்கை தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வ முடிவாக கருத முடியாது என சேனாதிராஜா தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவிப்பது கட்சியினால் எடுக்கப்பட்ட பொதுவான தீர்மானம் அல்ல என்றும், அது ஒரு சிலரால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட தீர்மானம் என்றும் சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

எஸ்.ஸ்ரீதரன், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சி.யோகேஸ்வரன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ நேசன் மற்றும் முக்கியத் தலைவர்கள் ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...

தேர்தல் தினத்தன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்கிழமை(06) மதியம் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத்...

வியட்நாம் செல்கிறார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வியட்நாம் ஜனாதிபதி லுவாங் குவோங்கின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மே 04 முதல்...