follow the truth

follow the truth

June, 18, 2025
Homeலைஃப்ஸ்டைல்820 கோடி மக்கள் தொகையில் 4.3 % பேரே நலமுடன் உள்ளனர் - ஆய்வில் தகவல்

820 கோடி மக்கள் தொகையில் 4.3 % பேரே நலமுடன் உள்ளனர் – ஆய்வில் தகவல்

Published on

820 கோடி கொண்ட மக்கள் தொகையில் 4.3 சதவீதம் பேரே பூரண நலமுடன் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இன்றைய உலகில் மக்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வைத்தியர்களை நாடிய வண்ணம் உள்ளனர். பணக்கார நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரை மருத்துவமனைகளில் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது.

இந்நிலையில் கடந்த 1990 முதல் 2013ம் ஆண்டு வரை 188 நாடுகளில் உடல்நலக்குறைவு தொடர்பாக ‘ குளோபல் பர்டன் ஒப் டிசீஸ்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதனை அடிப்படையாக வைத்து ஆய்வு கட்டுரை ஒன்று ‘லான்செட்’ இதழில் வெளியாகி உள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் 820 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், 4.3 சதவீதம் பேர் மட்டுமே நலமுடன் உள்ளனர். மற்றவர்கள் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்று இந்த எண்ணிக்கையை அதிகரித்து இருக்கும். பெரும்பாலான மக்கள் முதுகுவலி, மன அழுத்தம், ரத்த சோகை, தொண்டை புண், வயது முதிர்வால் காது கேளாமை ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர்.

50 சதவீத மக்கள் தசை தொடர்பான பிரச்சினைகள், மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பானவற்றால் அவதிப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இன்றைய உலகில் மருத்துவ அறிவியலை காட்டிலும் புதிய நோய்கள் மிக வேகமாக உருவாகி ஆரோக்கியத்திற்கு பெரிய சவாலாக உள்ளது என்பது தெளிவாகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி – மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால்...

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த...

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப்...