follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

Published on

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தனுஷா பண்டார தெரிவித்தார்.

இலங்கையின் ஊழலுக்கு எதிரான தேசிய செயற்றிட்டம் 2025-2029 இற்கு அமைய பாராளுமன்றத்தில் அமைக்கப்பட உள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் வகிபாகம் மற்றும் அதனால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் விடயங்கள் குறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் பணியாட்தொகுதியினரை விழிப்புணர்வூட்டும் நோக்கில் பாராளுமன்றத்தில் நேற்று (16) இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் ஊழலுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் 2025-2029 இற்கு உட்பட்டதாக ஜனாதிபதி செயலகத்தினால் அரசாங்க நிறுவனங்களில் உள்ளக அலுவல்கள் பிரிவொன்றை அமைப்பது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருப்பதுடன், இதற்கு அமைய குறித்த பிரிவை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி இங்கு உரையாற்றுகையில், அரசாங்க சேவையில் ஊழலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையும் வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த உள்ளக அலுவல்கள் பிரிவு அரசாங்க அதிகாரிகளின் நேர்மையை உறுதி செய்வதிலும், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத திறமையான அரசாங்க சேவையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்க முடியும் என்றும் கூறினார்.

இந்த செயல்முறையை முறையாக செயல்படுத்துவதற்கு பொருத்தமான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மட்டும் போதாது என்றும், அதன் சரியான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு அனைவருக்கும் பொதுவான பொறுப்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...