follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2பெண் தொழில் முனைவோருக்கான திலித்திடமிருந்து விசேட சலுகைகள்

பெண் தொழில் முனைவோருக்கான திலித்திடமிருந்து விசேட சலுகைகள்

Published on

நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் பெற்றுக்கொண்டுள்ள கடனுக்கான வட்டியை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வேலைத்திட்டத்தின் மையமானது, இலங்கையின் பெண்களை தொழில் முனைவோர் மூலம் வலுவூட்டுவது ஆகும்.

அதற்காக, உங்களுக்குத் தேவையான மூலதனத்தை அரசாங்கம் வழங்கும் விதம், உங்களுக்குத் தேவையான பலத்தை அது எவ்வாறு வழங்குவதுடன், சில காரணங்களால் தொழில் முனைவோர் ஆரம்பித்து அது நஷ்டமடைந்தால் அதை முன்னெடுத்து செல்ல அரசு உதவும் வழியை குறிப்பிட்டுள்ளோம்.

அதுமட்டுமல்லாது இன்று நுண்நிதி கடன்களால் இன்னல்களுக்குள்ளாகும் இலங்கைப் பெண்களை மீட்பதற்காக நுண்கடன் மீது சுமத்தப்பட்டுள்ள நியாயமற்ற கடன் வட்டியை முற்றாக நிறுத்துவதற்கு முன்மொழிந்துள்ளோம்.

முன்மொழியப்பட்ட திட்டத்தை எவ்வாறு செய்வது என்பதும் உள்ளது.” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...