follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுபிரியந்தவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

பிரியந்தவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் நிதியுதவி

Published on

பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிதியுதவி வழங்கியுள்ளார்.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரண்டாவது தடவையாக இன்று(10) விஜயம் செய்துள்ளார்.

பிரியந்தவின் இரண்டு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் இரண்டு நிதி நன்கொடைகளை எதிர்க்கட்சித் தலைவர் வழங்கியுள்ளார்.

மேலும் அவரது பிள்ளை ஒருவரின் கல்வி நடவடிக்கைக்காக மடிக்கணினி ஒன்றும் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த பிரியந்த குமாரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து அவதானித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் நியாயமான விசாரணையின் மூலம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தான் அரசு பாடுபடும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் கல்வியை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உதவிகள் தொடர்ந்தும் தன்னால் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...