follow the truth

follow the truth

July, 7, 2025
HomeTOP1ஜனாதிபதித் தேர்தல் - பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

Published on

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பிற்காக தேவையான அளவு வழங்குவதற்கு முப்படைகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் பல பொலிஸ் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த செயலாளர், வன்முறைகள் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

எந்தவொரு அழைப்பு விடுக்கப்பட்டாலும் பொலிஸாருக்கு உதவுவதற்கு ஆயுதப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் ஆணையத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

கொழும்பு – தேர்தல் ஆணையத்தின் அனைத்து மின் சேவைகளும் இன்று (07) முதல் மறு அறிவிப்பு வரும் வரை...

வைத்தியர் மகேஷியின் மகள் கைது

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இலஞ்ச ஒழிப்பு ஆணைய...

மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளம் இறக்குமதி

கண்டி - தேவையற்ற விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மூன்று லட்சம் மெட்ரிக் டன் சோளத்தை இறக்குமதி செய்ய...