follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

கேரளாவில் புதிய வகை குரங்கு அம்மை தொற்று அடையாளம்

Published on

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு அதன் புதிய வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திரும்பிய 38 வயது நபருக்கு கடந்த வாரம், குரங்கு அம்மை பாதிப்பு, பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபருக்கு அதன் புதிய வகையான ‘கிளேட் 1பி’ தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தப் புதிய வகை குரங்கு அம்மை கிளேட் 1, 2 ஆகிய வகைகளை விட ஆபத்தானது என மருத்துவ நிபுணா்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...

ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு – 03 நாட்களுக்கு நிறுத்தம்

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக 24 மணி நேரம் செயற்படும் சேவை எதிர்வரும்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடவுள்ளது

பாராளுமன்றம் எதிர்வரும் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவுள்ளதாக சபாநாயகரின் தலைமையில் இன்று(02) நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த...