follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

Published on

நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது.

சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரை 4 கிலோமீற்றர் தூரத்தில் இரண்டு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த கேபிள் கார் செயற்திட்டமானது சுவீடன் வெளிநாட்டு உதவித் திட்டத்தின் கீழ் முழுமையாக நிதியளிக்கப்பட்டுள்ளதுடன், 55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கேபிள் கார் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சகத்தின் கேட்போர் கூடத்தில் கைச்சாதிட்டப்பட்டது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...