சீரற்ற காலநிலை மழை காரணமாக மேல் மாகாணத்தின் 03 கல்விப் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை, யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் என்பனவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுவெல, கொலன்னாவ மற்றும் வத்தளை ஆகிய கல்விப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.