follow the truth

follow the truth

June, 28, 2025
HomeTOP2அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை - மஹிந்த

அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை – மஹிந்த

Published on

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷர்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

கேள்வி – தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

“ரொம்ப தயார்.”

கேள்வி – பொதுஜன பெரமுனவின் வெற்றி என்ன?

“வெற்றி மிக எளிதாக இருக்கும்”

கேள்வி – நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா?

‘‘தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன்.. அரசியல்வாதி ஒருபோதும் நிரந்தரமாக ஓய்வு பெறுவதில்லை.

கேள்வி – ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக ராஜபக்சர்கள் ஓய்வு பெற்றுள்ளனர் எனத் தெரிவித்திருந்தாரே.. நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓய்வு பெறாத மூத்த அரசியல்வாதிகள் நிறையே இருக்கின்றனர்.

கேள்வி – ராஜபக்ஷ தேர்தல் கேட்கவில்லை என்று சமூகக் கருத்து உருவாகவில்லையா?

“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஸ் சாரதிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம்

இலங்கை போக்குவரத்து சபை உட்பட அனைத்து பயணிகள் பேருந்துகளின் சாரதிகளும், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல்...

ஸ்டூடியோக்களை இழுத்து மூடும் Microsoft நிறுவனம் – பயத்தில் 2000 ஊழியர்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில்...

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...