follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP1உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது என்ன?

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதோர் செய்ய வேண்டியது என்ன?

Published on

2024 பாராளுமன்றத்‌ தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளை தபாலில் விநியோகிக்கும்‌ பணிகள்‌ கடந்த வியாழக்கிழமையுடன் (07) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகள்‌ கிடைக்காத வாக்காளர்களுக்கு 2024 நவம்பர்‌ மாதம்‌ 14 ஆம்‌ திகதி வரை அலுவலக நேரத்தில்‌ அவர்கள்‌ தேருநர்‌ இடாப்பில்‌ பதிவுசெய்துகொண்ட முகவரிக்கு உரிய பிரதேச தபால் அலுவலகத்திற்குச்‌ சென்று தமது ஆளடையாளத்தை உறுதிபடுத்தி தமது உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டைகளைப்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌.

உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையொன்று கிடைக்காத வாக்காளர்களுக்கு பின்வரும்‌ நடவடிக்கைகளைப்‌ பின்பற்றுவதன்‌ மூலம்‌ உத்தியோகபூர்வ வாக்காளர்‌ அட்டையின்‌ பிரதியொன்றை நிகழ்நிலை (Online) ஊடாக பெற்றுக்‌ கொள்வதற்கு தேர்தல்‌ ஆணைக்குழுவினால்‌ வசதி செய்யப்பட்டுள்ளது.

 

May be an image of text

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...