follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2பொதுத் தேர்தல் - முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொதுத் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று(10) முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 231 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பானவை என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் நேற்று (10) வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2811 என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2,162 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 649 முறைப்பாடுகளின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...