follow the truth

follow the truth

June, 28, 2025
Homeஉள்நாடுதிருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் - வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி

திருமணம், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் – வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய வசதி

Published on

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 07 வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் கொன்சல் ஜெனரல் அலுவலகங்கள் மூலம் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன், கனடாவின் டொராண்டோ, இத்தாலியின் மிலான் மற்றும் டுபாய் தூதரகங்கள் மூலம் இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கு ஏற்ப வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்தச் சான்றிதழ்களை வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு e- BMD தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாரஹேன்பிட்டியில் 3வது ஒசுசல திறக்கப்பட்டது

நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார்...

இறக்குமதி, ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்கு அனுமதி

1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2025 மே 19ஆம் திகதிய...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...