follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

பதுளை செங்கலடி பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு

Published on

கடந்த 18 ஆம் திகதி பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் கடந்த 6 நாட்களாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களின் துரித முயற்சியால் கற்பாறைகள் அகற்றப்பட்டு இன்று மதியம் 12.00 மணியளவில் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்தாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6.00 மணிக்கு மேல் அவ்விடத்தில் வீதி மூடப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மிகவும் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...