follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2டக்ளஸுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

Published on

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்று(25) மீள பெறப்பட்டுள்ளது.

தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலை மோசடி வழக்கு தொடர்பான விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை (21) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது முறைப்பாட்டாளரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்றில் ஆஜராகாத நிலையில், நீதவானினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி , மருத்துவ காரணங்களால், வழக்கு விசாரணை தினத்தன்று மன்றில் முன்னிலையாக முடியவில்லை என தெரிவித்ததுடன் , மருத்துவ சான்றிதழ்களையும் மன்றில் சமர்ப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...