follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP224 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

24 மணித்தியாலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Published on

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கள் மற்றும் தரைப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை(26) மாலை 4 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு குறித்த எச்சரிக்கை அமுலில் இருக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(25) காலை மத்திய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது..

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் வடமேல் திசையில் பயணித்து ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நாட்டின் கிழக்கு கடலை அண்மித்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணத்தின் சில இடங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பல்கலை மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய மூவரடங்கிய குழு

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் திடீர் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் குறித்து கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை...

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...