follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2டேன் பிரியசாத் - மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

டேன் பிரியசாத் – மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

Published on

டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று(27) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘அரகலய’ போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக கருதப்படும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, டேன் பிரியசாத் மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...