follow the truth

follow the truth

July, 14, 2025
HomeTOP2"நாங்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் சாப்பிட மாட்டோம், உத்தியோகபூர்வ வாகனங்களில் செல்லமாட்டோம் என்று கூறவில்லை.."

“நாங்கள் ஒருபோதும் பாராளுமன்றத்தில் சாப்பிட மாட்டோம், உத்தியோகபூர்வ வாகனங்களில் செல்லமாட்டோம் என்று கூறவில்லை..”

Published on

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு உட்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்திலும் உணவு, பொது சந்தையில் நிலவும் விலைக்கே வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்றம் வந்த முதல் நாளிலிருந்தே தாம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற உணவை உட்கொள்ள மாட்டார்கள், விடுதிகளில் தங்க மாட்டார்கள், வாகனங்களை பாவிக்க மாட்டோம் என அறிவித்துள்ளதாக சிலரை நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வர முடியாது என்று கூறிய அவர், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராளுமன்றில் உணவு வழங்குவதாகவும், உணவு சாதாரணமாக வழங்கப்பட வேண்டும் என்று தனது கட்சி கூறுவதாகவும் தெரிவிக்கின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்தளவுக்கு புத்துயிர் – பிமலிடமிருந்து மறுசீரமைப்பு திட்டம்

ஹம்பாந்தோட்டை மத்தல சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற ஆய்வு சுற்றுப்பயணத்தில் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல்...

அழுத்தம், நுட்பம், நடவடிக்கை – அரசு ஊழியர்கள் மீது அதிரடி தீர்ப்பு

அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இவர்...

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...