follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

Published on

கடந்த சில வாரங்களில் வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.

தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய அழைப்புக்களினூடாக, வாட்ஸ் அப் குறுஞ்செய்தியினூடாக கோரப்படும் குறியீட்டு இலக்கங்களை (OTP) வழங்க வேண்டாமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு வாட்ஸ் அப் ஊடுருவப்பட்டால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை அழித்துவிட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலை விரைவில் நிவர்த்திக்க முடியுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...