follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

WhatsApp ஊடுருவல் தொடர்பில் 74 முறைப்பாடுகள் பதிவு

Published on

கடந்த சில வாரங்களில் வாட்ஸ்அப் ஊடுருவல் தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.

தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய அழைப்புக்களினூடாக, வாட்ஸ் அப் குறுஞ்செய்தியினூடாக கோரப்படும் குறியீட்டு இலக்கங்களை (OTP) வழங்க வேண்டாமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவ்வாறு வாட்ஸ் அப் ஊடுருவப்பட்டால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை அழித்துவிட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலை விரைவில் நிவர்த்திக்க முடியுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...