follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பு

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதியிலுள்ள பழக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இறக்குமதியாளரின் விபரங்களின்றி உணவுப்பொருள் விற்பனை செய்தல் மற்றும் பாடசாலை உபகரணங்களின் விலையைக் காட்சிப்படுத்தாமல் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி வரை விசேட சோதனை நடவடிக்கை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சுமார் 1,750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...