follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2அதிக விலைக்கு அரிசி விற்பனை - நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

அதிக விலைக்கு அரிசி விற்பனை – நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு

Published on

அரிசி தொடர்பில் நாடளாவிய ரீதியில் 50 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக அதிகாரசபைக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுக்கி வைக்கப்பட்ட அரிசித் தொகை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமல் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுதல், காலாவதியான அரிசியை கண்டறிதல் மற்றும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்வதற்குமான அதிரடி சோதனையொன்றை இன்றைய தினம் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கொழும்பு புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு அரிசி மொத்த விற்பனை நிலையங்களில் மேற்கொண்டிருந்தனர்.

அரிசி மறைத்தல் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் அரிசி விற்பனை சம்பந்தமான ஏனைய முறைப்பாடுகள் காரணமாகவே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது

அத்தோடு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த பல வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு நாட்டு அரிசியை விற்பனை செய்த பல வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அமில ரத்நாயக்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...