follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2யாழில் எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுக்குள் - இதுவரை 7 பேர் பலி

யாழில் எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுக்குள் – இதுவரை 7 பேர் பலி

Published on

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவிவந்த எலிக் காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

யாழில் எலிக்காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (14) வரை 58 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் தொற்றாநோய் நிபுணர் டொக்டர் துஷானி டபரேரா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 11 பேருமாக மொத்தமாக 39 பேர் எலிக் காய்ச்சலுக்காகத் தற்சமயம் சிகிச்சை பெற்றுவருவதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கரவெட்டி – துன்னாலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...