follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP2செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

பாராளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், கட்சியின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுத் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் செலவு அறிக்கைகள் இன்று (17) முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் இராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலப்பகுதியில், மாவட்ட மட்டத்தில் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 8,361 வேட்பாளர்களில் 7,412 பேர் செலவு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.

சுயேச்சைக் குழுக்களில் போட்டியிட்ட 690 வேட்பாளர்களில் 493 பேர் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும், 527 தேசிய பட்டியல் வேட்பாளர்களில் 434 பேர் தங்களது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...