follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP2பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

பொய் சொல்ல மக்களுக்கு முழு உரிமை உண்டு..- கொட்டச்சி

Published on

எந்தவொரு உண்மையையும் பொய் என்று கூறுவதற்கும், எந்தவொரு பொய்யையும் உண்மை என்று கூறுவதற்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கம் ஏதாவது நல்லது செய்யும் போது அதன் எதிர்மறையான பக்கத்தைப் பார்க்கவும் மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறுகிறார்.

சமுதாயத்தைப் பாதிக்கும் தீய செயல்களைச் செய்தாலும் அதை நல்லது என்று சொல்லவும் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஜனநாயக உரிமைக்கு அரசாங்கம் ஒருபோதும் வேலி போடாது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், முடிவுகள் வர கொஞ்சம் நேரம் எடுக்கும் என்றும், எதையும் விமர்சிக்கும் முன் முடிவுக்காகக் காத்திருப்பது நல்லது என்றும் அவர் கூறினார்.

களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வருவதற்காக தமது கட்சியினர் ஒருபோதும் பொய் சொல்லவில்லை என தெரிவித்த அவர், அவ்வாறானதொரு தேவை ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...