follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2கொழும்பு - அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

Published on

கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறித்த பெரஹெர இன்று (29) இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பெரஹெர நிகழ்வின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு கொஸ்கம கலுஅக்கல சந்தியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வலதுபுறமாக லபுகம வீதியில் 12 கிலோமீற்றர் பயணித்த பின் தும்மோதர சந்தியில் இடது புறமாக திரும்பி தும்மோதர – அவிசாவளை வீதியில் 8 கிலோமீற்றர் பயணித்த பின்னர் புவக்பிட்டிய சந்தியில் வலதுபுறம் திரும்புவதன் ஊடாக பிரதான வீதிக்குள் பிரவேசிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...