follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2கொழும்பு - அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு

Published on

கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறித்த பெரஹெர இன்று (29) இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பெரஹெர நிகழ்வின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு கொஸ்கம கலுஅக்கல சந்தியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வலதுபுறமாக லபுகம வீதியில் 12 கிலோமீற்றர் பயணித்த பின் தும்மோதர சந்தியில் இடது புறமாக திரும்பி தும்மோதர – அவிசாவளை வீதியில் 8 கிலோமீற்றர் பயணித்த பின்னர் புவக்பிட்டிய சந்தியில் வலதுபுறம் திரும்புவதன் ஊடாக பிரதான வீதிக்குள் பிரவேசிக்கலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...