follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1மியன்மார் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் - முஜிபுர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மியன்மார் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – முஜிபுர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published on

அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் அகதிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்த மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்பதால், இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 சிறுவர்கள் மற்றும் 30 பெண்கள் உட்பட 103 மியன்மார் அகதிகள் நெடுநாள் மீன்பிடி படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடற்பகுதியை அடைந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களைத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் மியன்மார் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...