follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1மியன்மார் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் - முஜிபுர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

மியன்மார் அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – முஜிபுர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published on

அண்மையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மியன்மார் அகதிகளை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை குறித்த மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்பதால், இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

25 சிறுவர்கள் மற்றும் 30 பெண்கள் உட்பட 103 மியன்மார் அகதிகள் நெடுநாள் மீன்பிடி படகில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்று கொண்டிருந்த போது, கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடற்பகுதியை அடைந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களைத் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போதைய அரசாங்கம் மியன்மார் அகதிகளை அவர்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுலில்

வருடாந்திர கட்டண திருத்தத்தின் கீழ், 0.55% சதவீதம் குறைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து கட்டணங்கள் இன்று (04) முதல் நாடு...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு...

பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று...