follow the truth

follow the truth

January, 21, 2025
HomeTOP1வவுனியாவில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்

வவுனியாவில் அதிகரித்து வரும் எலிக்காய்ச்சல்

Published on

கடந்த வருடத்தில் வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் எலிக்காய்ச்சல் காரணமாக 41 பேர் பாதிப்புக்குள்ளானதாக வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்பட்ட, எலிக்காய்ச்சலை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த 41 பேரும் கடந்த வருடத்தின் பெரும்போகம் மற்றும் சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நோயெதிர்ப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்வதன் ஊடாக எலிக்காய்ச்சல் நோய் பரவலைத் தடுக்க முடியும் என வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...