follow the truth

follow the truth

July, 18, 2025
HomeTOP1வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

வீட்டுத்திட்ட நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பம்

Published on

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தனிநபருக்கும் வீட்டு உரிமையை வழங்குவதாகும்.

இதன்படி, முன்னுரிமை அடிப்படையில் உரிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை, வசதியான வீட்டு உரிமையில்லாத கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 65,000 பேர் கொழும்பு நகர எல்லையில் வசிப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

அதற்காக மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு தரவுகளை அடிப்படையாகக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...

தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை யானைகள் சரணாலயத்தில் விடுவிப்பு

உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன. உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு...

புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள்...