follow the truth

follow the truth

January, 22, 2025
HomeTOP1பதிவு செய்யப்படாத மொபைல் போன்களை பயன்படுத்த தடை?

பதிவு செய்யப்படாத மொபைல் போன்களை பயன்படுத்த தடை?

Published on

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படாத கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட தொடர்பாடல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கையில் தடை விதிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களை கொண்டு வருவதை தடுப்பதே இதன் நோக்கம் என அதன் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாவனையில் உள்ள கையடக்க தொலைபேசிகளுக்கு இந்த புதிய வேலைத்திட்டம் இடையூறு ஏற்படுத்தாது என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

“சட்டவிரோதமான தகவல் தொடர்பு சாதனங்களை முறையான தரம் இன்றி கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டு மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் இடையூறுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

நாட்டின் நுகர்வோருக்கு இதுபோன்ற உபகரணங்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பது எங்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாகும். இதற்காக இம்மாத இறுதியில் தானியங்கி முறையை அமுல்படுத்த உள்ளோம்.

மக்களுக்கு கல்வியறிவு அளித்து இறுதியில் நாட்டிற்குள் சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டுவருவதைத் தடுக்கவும். இந்த அமைப்பில், தற்போது பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள் தடுக்கப்படவில்லை மற்றும் வெளிநாட்டவர்கள் பாவிக்கும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசு அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும்...

சட்டவிரோதமாக குடியேறியுவர்களுக்கு புதிய இடம்

களனிவெளி ரயில் மார்க்க பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வேறு இடமொன்றில் குடியமர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பாதணிகளுக்கான 3,000 ரூபா வவுச்சர்

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, பிரிவெனாக்களிலுள்ள பௌத்த துறவு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கான பாடசாலை பாதணி வழங்கும்...