follow the truth

follow the truth

August, 25, 2025
HomeTOP2இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தல்

Published on

தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரப்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரமற்ற வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் இந்த நாட்டிற்கு கொண்டுவரப்படுவதனால், உள்நாட்டு தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிமுறைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
திறந்த பொருளாதாரத்தின் ஊடாக நாட்டிற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற பல பொருட்கள், சேவைகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் தரப்படுத்தலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உள்நாட்டு தொழில்முனைவோரைப் பாதுகாக்க ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...