follow the truth

follow the truth

February, 19, 2025
HomeTOP2நாயை தூக்கிலிட்ட பெண்ணொருவர் கைது

நாயை தூக்கிலிட்ட பெண்ணொருவர் கைது

Published on

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் தான் வளர்த்த ஆட்டினை கடித்த அயல்வீட்டாரின் நாயினை தூக்கிலிட்டு கொடூரமான முறையில் கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட நாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வௌியானதை தொடர்ந்து, பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மாங்குளம் பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைதுசெய்துள்ளதுடன், 1907ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க விலங்குகள் வதை தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் சில உணவுகளின் விலைகள் அதிகரிப்பு?

இன்று(18) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம்...

பாகிஸ்தான் வர்த்தகத் தூதுக்குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு

பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் இன்றையதினம்(18) சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைச் சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம்...

IMF நிறைவேற்று சபை பெப்ரவரி 28 கூடுகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...